Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அமைச்சர் தொகுதியில் கோட்ட தலைவரின் வார்டை புறக்கணிக்கும் மாநகராட்சி அதிகாரிகள்

திருச்சி தென்னூர் பகுதியில் உள்ள விஸ்வநாதபுரம் சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு குழி வெட்டப்பட்டது. இதில் குடிநீர் குழாய் உடைந்து விட்டது. இதை பொருட்படுத்தாமல் அவசரம் அவசரமாக குழியை மூடி சென்றனர்.

இதனால் அதிலிருந்து தினமும் தண்ணீர் வீணாக வெளியேறி அருகில் உள்ள பள்ளி, கோவிலின் முன் தேங்கி நிற்கிறது. பாசான் பிடித்து கொசுக்கள் பரவும் அபாயம் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கோவிலுக்கு செல்வோர், பள்ளிக் குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். கோ-அபிஷேகபுரம் கோட்ட தலைவரின் வார்டின் அவலத்தை மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்து விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா? அமைச்சர் தொகுதி மக்கள் குறைகள் தீர்க்கப்படுமா…

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *