Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

481 கிலோ கலப்பட தேயிலை தூள் பறிமுதல்

பொதுமக்களிடம் இருந்து வந்தபுகாரை அடுத்து நேற்று 03.04.2022 செவ்வாய்க்கிழமை KK நகரில் உள்ள ஐயங்கரன் பேக்கரி மற்றும்தேநீர் கடையை ஆய்வு செய்ததில் சுமார் 6 கிலோ கலப்பட டீ தூள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. 

அடுத்து விசாரணையில் KK நகர் சீதாதேவி கோயில் அருகில் புஷ்பராஜ் என்ற நபரிடம் 75 கிலோ கலப்பட தேயிலை தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், விசாரணையில் அவரது சகோதரன் பொன்னகர் கருணாகரன் என்பவரிடமிருந்து சுமார் தேயிலை தூள் 240 கிலோ கலப்பட செய்யப்பட்டது. மேலும், அவரது மற்றொரு சகோதரர் விஜயகுமார் என்பவரிடம் சுமார் 160 கிலோ கலப்பட தேயிலை தூளும் மற்றும் கலப்படத்திற்கு பயன்படுத்தும் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டு ஆக மொத்தம் 481 கிலோ கலப்பட தேயிலை தூள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்கள் நால்வரிடமும் வழக்கு தொடுப்பதற்காக 8 சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

மேலும், தேயிலை தூள்களை மொத்தமாக விற்பனை செய்பவர்கள் கலப்பட தேயிலை தூளை விற்பனை செய்யக்கூடாது என்று உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு கூறினார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *