Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மின்கம்பங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக அமைச்சர் நேரில் ஆய்வு

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு அவர்கள் இன்று (21.6.22) திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சாலை, ராஜா காலனியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மின்கம்பங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, போக்குவரத்திற்கு இடையூறின்றி மின்கம்பங்களை மாற்றி அமைத்து, குடியிருப்புகளுக்கு மின் சேவை வழங்கிட மின்வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர்  ஆர். வைத்திநாதன்,மின்வாரிய தலைமைப் பொறியாளர் எஸ். செடியழகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *