Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மணப்பாறையில் உலக யோகா தினத்தையொட்டி 700 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி

மணப்பாறையில் உலக யோகா தினத்தையொட்டி 700 மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு பயிற்சி. பெற்றனர்.

உலக யோகா தினத்தையொட்டி திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மனவள கலை மன்றம் சார்பில் இன்று காலை நடைபெற்ற யோக பயிற்சியில் தியாகேசர் ஆலை மேல்நிலைப்பள்ளி என்.சி.சி மாணவர்கள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்று யோக பயிற்சி செய்தனர் பயிற்சியினை மணப்பாறை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அமிர்தவள்ளி ராமசாமி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மருத்துவர் இரத்தனமாலா, ஊராட்சி மன்ற தலைவர் கே.கணேசன், பள்ளி முதல்வர் அருளரசன், என்.சி.சி. அலுவலர் முத்துக்குமார், மனவள கலை மன்ற நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் சூரியநமஸ்கார், தாடாசனம், ஏகபாதாசனம், சக்கராசனம், வஜ்ராசனம், திரிகோணாசனம், உஸ்டாசனம், யோகமுத்ரா உள்ளிட்ட 9 வகையான யோக ஆசனங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *