Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

 கடந்த 11.06.22-ம்தேதி கண்டோன்மெண்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருமண்டபம் SBI வங்கி அருகில் காபி கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1500/- பணத்தை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரி அபுஜி (எ) அபுதாஹீர்  என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் எதிரி அபுஜி (எ) அபுதாஹீர் கண்டோன்மெண்ட் பகுதியில் கல்லூரி மாணவர்களை தாக்கி பணம் மற்றும் நகைகளை பறித்ததாக ஒரு வழக்கும் மற்றும் பொதுமக்களை ஆயுதங்களால் அச்சுறுத்தி பணம் கொள்ளையடித்ததாக 3 வழக்குகளும், கொலை மற்றும் உயிருக்கு ஊறுவிளைவித்ததாக 5 வழக்குகள் என மொத்தம் 10 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

எனவே, எதிரி அபுஜி (எ) அபுதாஹீர் என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், பொதுமக்களை ஆயுதங்களை கொண்டு அச்சுறுத்தியும், கத்தியை காட்டி மிரட்டி பணம் கொள்ளையடிப்பவர் என விசாரணையில் தெரிய வருவதால், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மெண்ட் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன்,  அவர்கள் மேற்படி எதிரி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற பொது மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பங்கம் விளைவிக்கும் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *