Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் சமூக வலுவூட்டல் முகாம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறையில் இன்று (1.7.22) நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் சமூக வலுவூட்டல் முகாமினை மாண்புமிகு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் திரு.அ. நாராயணசுவாமி அவர்கள் காணொலிக் காட்சியின் வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார்,  ஆகியோர் பங்கேற்று 618 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூபாய் 47.53 இலட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கினர்.

இந்நிகழ்வில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.அப்துல்சமது, அலிம்கோ நிறுவனத்தின் தலைமை சந்தைப்படுத்துதல் அலுவலர் அஜய் சௌத்ரி, முதுநிலை மேலாளர் வி. அசோக் குமார், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சீ.சந்திரமோகன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் அமிர்தவள்ளி ராமசாமி,மூ.பழனியாண்டி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *