Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கத்தியை காட்டி பணம் மற்றும் செல்போன் பறித்த நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

கடந்த 22.04.22-ம்தேதி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணபதி நகரில் தள்ளுவண்டியில் கஞ்சி விற்பவரிடம் கத்தியை காட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரி குலாம் தஸ்தகிர்  என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் எதிரி குலாம் தஸ்தகிர் மீது கொலை முயற்சி செய்த வழக்கு, பொதுமக்களிடம் கத்தியை காட்டி பணம் கொள்ளையடித்ததாக 4 வழக்குகளும், பணம் கேட்டு தரமறுத்தவரின் நான்கு சக்கர வாகனத்தை சேதப்படுத்தியதாக ஒரு வழக்கு உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் 11 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

கடந்த 20.06.22-ம்தேதி அமர்வு நீதிமன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இளங்காட்டு மாரியம்மன் கோயில் அருகே நடந்து சென்றவரிடம் செல்போனை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்தும் எதிரி வருண் சூர்யா பிரகாஷ் வயது 24 த.பெ.சசிக்குமார் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் எதிரி வருண் சூர்யா பிரகாஷ் மீது திருச்சி மாநகரில் லாரியில் தூங்கி கொண்டிருந்த நபர்களிடம் செல்போனை திருடியதாக 4 வழக்குகளும், திருச்சி மாவட்ட சமயபுரம், கொள்ளிடம் காவல் நிலையங்களில் செல்போன் திருடிய மற்றும் இதர 18 வழக்குகள் உட்பட 24 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

எனவே, எதிரிகள் குலாம் தஸ்தகிர், மற்றும் வருண் சூர்யா பிரகாஷ் ஆகியோர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், கத்தியை காண்பித்து செல்போன் மற்றும் பணம் பறிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் என விசாரணையில் தெரிய வருவதால், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன்,  மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *