திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நோடல் அலுவலர்களுக்கான மண்டல கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மூத்த மண்டல இயக்குனர் டாக்டர் என் சண்முகம் தலைமை வகித்தார் மாவட்ட உதவி இயக்குனர் டாக்டர்.ஜி அன்பழகன், உதவிப் பதிவாளர் இளம்பரிதி ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர் சந்திப்பின்போது, மண்டல இயக்குனர் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் 15 நாடுகளுடன் இந்தியாவில் 2.8 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு கல்வியை வழங்குகிறது. இந்த சாதனையை 67 பிராந்திய மையங்கள் தோராயமாக 2981 கற்றல் ஆதரவு மையங்கள் மற்றும் இருபத்தி ஒன்பது வெளிநாட்டு மையங்கள் மூலம் அடையப்படுகிறது அவர் தனது உரையில் இளங்கலை முதுகலை படிப்புகள் எந்த வயதினருக்கும் உழைக்கும் மக்களின் தேவையை பூர்த்தி செய்வதாக வலியுறுத்தினார்.
இந்திராகாந்தி திறந்த நிலை பல்கலை கழகத்தால் தொடங்கப்பட்ட படிப்புகள் புதிய வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன மற்றும் அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கையை நிறுவுகின்றன இரட்டைப் பட்டப்படிப்பு இளைஞர்கள் எந்த துறைக்கு மாறுவதற்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. டாக்டர் சுரேஷ் பிரடெரிக் பிரமுகர்களை கவுரவித்து வரவேற்புரை ஆற்றினார் சமீபத்திய மேம்பாடுகள், புதிய திட்டங்கள் திறன் பயிற்சி முயற்சிகள் கல்வி ஆலோசகர்கள் ஆன்லைனில் இணைத்தல் மற்றும் நிர்வாகம் மற்றும் நிதி விஷயங்களை குறித்து பின்னர் விவாதங்கள் நடைபெற்றன.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments