Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகளுக்கான புகார்களுக்கு தீர்வு காண Swachchata செயலி

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள் பொது சுகாதாரம் மற்றும் தூய்மை பணி சம்பந்தமாக தங்களது புகார்களை Swachchata App என்ற செயலியில் பதிவு செய்யலாம்.

திருச்சி மாநகராட்சியில் உள்ள அனைத்து பொதுமக்களும் இந்த செயலியின் மூலம் கழிவுநீர் அகற்றுதல், பாதாள சாக்கடைகளில் ஏற்படும் பாதிப்பு, குப்பைத்தொட்டி தூய்மை இல்லாமல் இருத்தல், தூய்மை பராமரிப்பில் ஈடுபடாமல் இருத்தல், பொது கழிப்பறைகள் சுத்தம் செய்தல், அங்கு ஏற்படும் தண்ணீர் மற்றும் மின்சாரம் குறித்த புகார் அளிக்க இந்த செயலியை பயன்படுத்தலாம்.

பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் புகார்களை சரிசெய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேற்படி செயலியை ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று திருச்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *