Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

சுய தொழில் தொடங்க திருநங்கைகளுக்கு உதவிய திருச்சி போலீசார்

திருச்சி அரியமங்கலம் வடக்கு உக்கடையை சேர்ந்த ரம்யா உள்ளிட்ட திருநங்கைகள் வாழ்வாதாரத்துக்காக கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து மாநகர ஆணையர் கார்த்திகேயன் துணை ஆணையர் ஸ்ரீதேவி உத்தரவின்படி திருநங்கைகள் நேற்று அரியமங்கலம் காவல்துறையினர் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உதவி ஆணையர் காமராஜ் அரியமங்கலம் காவல் ஆய்வாளர் பாஸ்கர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தங்கவேல் ஆகியோர் தலைமை வகித்து திருநங்கைகளுக்கு தள்ளு வண்டி உணவு கடை நடத்துவதற்கு ஒன்றை லட்சம் மதிப்பிலான தள்ளுவண்டி உள்ளிட்ட அனைத்து பொருட்கள் ரொக்கம் அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

புதிய பாத்திரம், மிக்ஸி, கிரைண்டர், பலசரக்கு மளிகை பொருட்கள், காய்கறி சாமான்கள் வாங்கி சுயதொழில் செய்து அவர்கள் வாழ்க்கையில் புதியதொரு பயணத்தை துவக்கி வைத்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர் சுசிலா உதவும் கரங்கள் மகாதேவன் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *