Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

47வது மாநில பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டி திருச்சியில் தொடக்கம்.

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் கடந்த 31.12.2021 முதல் செயல்பட்டு வருகிறது. இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ரைபிள் கிளப்பில் 47வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிஸ்டல் மற்றும் ரைபிள்  பிரிவுகள் 24.07.2022ம் தேதி முதல் 31.07.2022ந் தேதி வரையில் நடைபெற உள்ளது. 

தமிழகம் முழுவதும் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1300 போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் போட்டி முதல் முறையாக திருச்சி மாநகர காவல்துறை சார்பில் ரைபிள் கிளப்பில் நடத்தப்படுகிறது. இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், மத்திய மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ்குமார் கலந்து கொண்டனர்.

10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் சுடு தளத்தில் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத் (16 வயது வரை), யூத் (19 வரை), ஜீனியர் (21 வரை), சீனியர்(21 முதல் 45 வயது வரை), மாஸ்டர் (45 வயது முதல் 60 வயது வரை) மற்றும் சீனியர் மாஸ்டர் (60 வயதிற்கு மேல்) என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது. 

மேலும் பிஸ்டல் துப்பாக்கி சுடுவதற்கான போட்டியாளர்களுக்கு 24.07.22ம் தேதி முதல் 28.07.22ம் தேதி வரையில் போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவிக்க உள்ளார்கள். மேலும் 29.07.22ம் தேதி முதல் 31.07.22ம் தேதி வரையில் ரைபிள் துப்பாக்கி சுடுபவர்களுக்கான போட்டிகள் நடைபெற்று இறுதி நாளில் வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…

https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *