Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஆடி அமாவாசை திருச்சி காவிரி கரையில் குவிந்த பல்லாயிரக்கணக்கானோர்

திருச்சி காவிரி அம்மா மண்டபம் படித்துறையில் ஆடி அமாவாசையான இன்று தங்களது முன்னோர்களுக்கு காவிரி ஆற்றில் திதி கொடுத்து, தர்ப்பணம் செய்ய பல்லாயிர கணக்கான மக்கள் குவிந்தனர். ஆடி அமாவாசை நாளில், தங்களின் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதால், தாங்களும், தங்களின் வம்சத்தினரும் மேம்பாடு அடைவர் என்பது நம்பிக்கை. 

ஆகையால், காவிரி நதிக்கரைகளில், ஆடி அமாவாசை தினத்தன்று, ஆயிரக்கணக்கானோர் கூடி, தங்களின் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதை, வழக்கமாக கொண்டு உள்ளனர். குறிப்பாக, பூலோக சொர்க்கம் என்றழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அருகேயுள்ள, அம்மா மண்டபம் படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க, ஆண்டுதோறும், ஆடி அமாவாசை நாளில், ஆயிரக்கணக்கில் மக்கள் வருவர்.

இன்று ஆடி அமாவாசை என்பதால், அம்மா மண்டபம் படித்துறையில் தர்ப்பணம் செய்ய, பல்லாயிரக் கணக்கானோர் கூடினர். இம்முறை மேட்டூர் அணையிலிருந்து, நீர் திறந்து விடப்பட்டு காவிரி ஆறு நிரம்பி ஓடுகிறது. இதில் குளித்து மூழ்கி முன்னோர்க்கு திதி கொடுத்தனர்.

மாவட்ட , மாநகர நிர்வாகங்கள் சார்பில், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பபணியில் ஈடுபட்டனர். ஆயினும் மக்கள் பெருந்திரளாக கூடியதால், மாம்பழச் சாலையிலிருந்து, அம்மா மண்டபம் வழியாக, ஸ்ரீரங்கம் செல்லும் பாதை, மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *