Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கல்லூரி பேருந்தில் இருந்து விழுந்த 3ம் ஆண்டு மாணவர் – மருத்துவமனையில் அனுமதி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள புத்துணாம்பட்டி பகுதியில் இயங்கிவரும் நேரு நினைவுக் கல்லூரியில் பயிலும் 3ம் ஆண்டு மணவர் கல்லூரி செல்வதற்காக இன்று காலை கல்லூரி பேருந்தில் ஏறி உள்ளார் அப்போது அதிக மாணவர்கள் இருந்ததால் இவர் படியிலேயே நின்று சென்றுள்ளார். பேருந்து நீதிமன்றம் வளாகம் அருகே சென்று கொண்டிருந்த போது மாணவர் பேருந்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதனால்  தலையில் பின்புறம் அடிபட்டுள்ளதாக தெரிகிறது. உடனே சக மாணவர்கள் கல்லூரி பேருந்தை நிறுத்தி அவரை  துறையூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் 

இதனை தொடர்ந்து சக மாணவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவர்களிடம் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை கலந்து செல்ல கூறினார் இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் சக மாணவர்கள் கூறும்போது…. கல்லூரிக்கு வருவதற்காக துறையூரில் இருந்து இலவச பேருந்து இயக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் இதற்கு மறைமுகமாக கூடுதலாக 2000 எங்களிடம் பெற்றுள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை ஒரே பேருந்தில ஏற்றி வருவதால் மாணவர்கள் கல்லூரி செல்ல பேருந்தில் நிற்பதற்கு கூட இடமில்லாமல்  படியில் தொங்கியபடியே சென்று வருகின்றோம்.

நிர்வாகம் இலவச பேருந்து என்று சொல்லிவிட்டு தங்களிடம் கூடுதலாக பணம் வசூலிப்பதாகவும், மாணவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர் கல்லூரி வாகனங்கள் முறையாக இயக்கப்படுகிறதா என்று துறையூர் போக்குவரத்து அலுவலர் ஆய்வு செய்யாமல்  இருப்பதினால் இது போன்ற விபத்துகள் நடைபெறுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *