Thursday, August 21, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதவி விலக வேண்டும் திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி பேட்டி

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை நினைவு கூறும் வகையில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பாத யாத்திரை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி சிலை அருகிலிருந்து தொடங்கி அரசு மருத்துவமனை அருகே உள்ள காந்தி அஸ்தி மண்டபத்தில் நிறைவடைந்தது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்ட திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்….. இந்த பாத யாத்திரை சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறுவதோடு மட்டுமல்லாமல் தற்போது பா.ஜ.க ஆட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் நடத்தப்படுகிறது.

மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது பா.ஜ.க வினர் செருப்பு வீசியது வன்மையாக . இது காட்டுமிராண்டிதனமான செயல். அமைச்சர் என்றில்லை தனி மனிதன் மீதும் இது போன்ற தாக்குதல் செய்ய கூடாது. கருத்தை கருத்தால் தான் எதிர் கொள்ள வேண்டும். இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பதவி விலக வேண்டும்.

நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம். ஆனால் ஆளுநருக்கென்று சில வரைமுறைகள் உள்ளது அதை அவர் பின்பற்ற வேண்டும். ரஜினி அரசியல் பேசியதில் தவறில்லை, ஆளுநர்  அரசியல் பேச கூடாது என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *