Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மின் கட்டண உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் திருச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் கருத்தை கேட்காமல் தமிழ்நாடு மின்வாரியத்தின் கோரிக்கையை மட்டும் ஏற்று மின் கட்டண உயர்வுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. மின்வாரிய நட்டத்திற்கு பொதுமக்கள் பொறுப்பு அல்ல, கடந்த காலத்தில் நிர்வாக தன்மையும் தனியாரிடம் கூடுதல் கட்டணத்திற்கு மின்சாரத்தை வாங்கியதுமே காரணம். மேலும் சொந்த மின் உற்பத்திக்கு ஏற்பாடு செய்யாமல் இந்த சுமையை பொதுமக்கள் வியாபாரிகள் சிறு குறு நடுத்தர தொழில் முனைவோர் தலையில் சுமத்தி உள்ளனர். இதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜங்ஷன் பகுதி குழு சார்பாக திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு CPI(M) பகுதி செயலாளர் M.I.ரபிக் அஹமது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு (AlDWA) மாதர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் S.ரேணுகா மற்றும் M.வள்ளி ஆகியோர் சிறப்பு கண்டன உரையாற்றினர். மேலும் ஜங்ஷன் பகுதிக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் M.விஜய் R.கணேசன் A.அப்துல் கையூம்,A.ஷேக் மொய்தீன் மற்றும் CITU அரசு போக்குவரத்து சங்க நிர்வாகி தோழர்.சண்முகம், CITU ஆட்டோ சங்க நிர்வாகி தோழர்.மணிகண்டன் மற்றும் கிளை செயலாளர்கள் தோழர்கள்.A.அக்பர் அலி,K.பாபு கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….. https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய…… https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *