Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் இரவு முழுவதும் கனமழை

திருச்சி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை , திருச்சி லால்குடி, கள்ளக்குடி, மண்ணச்சநல்லூர், மருங்காபுரி, முசிரி, துறையூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக சராசரி 54.46 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதில் திருவெறும்பூர் நகரத்தில் அதிகபட்சமாக 169 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. இதேபோல திருச்சி ரயில்வே சந்திப்பு பகுதியில் 114 மில்லி மீட்டரும், திருச்சி பொன்மலை பகுதியில் 114.60 மில்லி மீட்டரும், துவாக்குடி பகுதியில் 100 மில்லி மீட்டரும் மழையளவு பதிவாகியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கொப்பம்பட்டியில் மிகக் குறைந்த அளவாக 5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

திடீரென இரவு முழுவதும் பெய்த கன மழையால், திருச்சி மாநகரத்தில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு, பின்னர் மூடப்பட்ட குழிகள், ஆங்காங்கே மீண்டும் பள்ளம் விழுந்து காணப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *