திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள அன்பு டீ ஸ்டால் கடையில் 12.01.2022 அன்று முதல் ஆய்வில் அந்தக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறிந்து ரூபாய் ஐந்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அந்தக் கடையில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டு மீண்டும் 05.08.2022 அன்று ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் அன்றைய தினத்தன்று அவசர தடையானை அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக சென்னை உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேனா 26/9/2022 அவசர தடையான உத்தரவு வழங்கியதன் அடிப்படையில் அந்த டீக்கடைக்கு சீல் செய்யப்பட்டது.
மேலும் மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில்…. திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகள் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006ல் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும் என்று கூறினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments