Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

மாவட்ட அளவிலான இளையோர் திருவிழா

இந்திய அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் செயல்படும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் 75வது சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவினை முன்னிட்டு மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் இளையோர் சக்தியை மேம்படுத்தவும் மற்றும் வலியுறுத்தும் விதமாகவும் திருச்சிராப்பள்ளியில் வரும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் இளையோர் திருவிழா நடைபெறவுள்ளது. அதையொட்டி கீழ்க்கண்ட போட்டிகள் நடைபெற உள்ளது.

போட்டிகள் விபரம் :

இளம் கலைஞர் (ஓவியம்), இளம் எழுத்தாளர் (கவிதை), போட்டோகிராபி (புகைப்படம்). பேச்சுப்போட்டி, இளையோர் கலைவிழா, மாவட்ட இளையோர் கருத்தரங்கம்.

போட்டிக்கான விதிமுறைகள்:

போட்டிகளில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த 01.04.2022 அன்று 15 முதல் 29 வயதிற்குட்பட்ட இளையோர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம், மேற்கண்ட போட்டிகளில் வரிசை எண் 1 முதல் 4 வரை, ஒரு நபர் ஒருபோட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

போட்டிகளில் வெற்றி பெறும் இளையோர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளும் வழங்கப்படும். மேலும் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிகளுக்கும், மாநில அளவில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுவார்கள்.

பங்கேற்க விருப்பமுள்ள இளையோர்கள் பூர்த்தி செய்யப்பட்டவிண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகலை இணைத்து மாவட்ட இளையோர்அலுவலர், நேரு யுவகேந்திரா, ரேஸ்கோர்ஸ் ரோடு காஜாமலை, திருச்சிராப்பள்ளி – 620 023 என்ற அலுவலக முகவரிக்கு வருகின்ற (06.10.2022) வியாழக்கிழமைக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு : மாவட்ட நேரு யுவ கேந்திரா அலுவலகத்தை நேரிலோ, அல்லது 9486753795, 6381785164 என்ற தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். போட்டி நடைபெறும் இடம் போட்டியாளர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார். தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *