Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வருமா? திருச்சியில் வைகோ பேட்டி

சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் வந்த மதிமு செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். இதில் தமிழக ஆளுநர் தொடர்ந்து திருக்குறள் மொழிபெயர்ப்பு தொடர்பான தவறான கருத்துக்களை பரப்பி வருவதாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர்… திருக்குறளைப் பற்றி தமிழக ஆளுநர் திரும்பத் திரும்ப தவறான தகவல்களை பரப்பி வருகிறார்.

திட்டமிட்டு ஒரு கூட்டம் (இந்துத்துவ அமைப்புகள், சங்பரிவார்) வேலை செய்வதற்கு ஆளுநர் துணை போவது மிகவும் துரதிஷ்டவசமானது. திருக்குறளைப் பற்றி ஆழ்ந்த ஞானம் அவருக்கு கிடையாது. இதுவரை 14 மசோதாக்களை ஒப்புதல் கொடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளார் ஆளுநர் என்றார்.

தமிழக அரசின் திட்டங்களை ஆளுநர் முடக்குகிறாரா என்ற கேள்விக்கு
தமிழகத்துக்கான திட்டங்களை ஆளுநர் முடக்க முயற்சிக்கிறார் என பதிலளித்தார்.
மேலும் செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த வைகோ…. மனம் போன போக்கில் பாஜக பேசிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…   https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *