Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

மணப்பாறை அருகே தேங்காய் நார் ஆலையில் தீ விபத்து

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சிக்கு அருகே உள்ள அதிகாரம் என்னுமிடத்தில் கார்த்திகேயன் என்பருக்கு சொந்தமான தேங்காய் நார் ஆலை உள்ளது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலையில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வரும் நிலையில் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு பணியாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.

இந்நிலையில் ஆலையில் தற்போது ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த மஞ்சு, நார், தேங்காய் மட்டைகள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தொடர்ந்து எரிந்து வருகிறது. இந்த தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது. தகவலறிந்து துவரங்குறிச்சி தீயணைப்புத்துறையினர் முதற்கட்டமாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் அருகிலுள்ள மணப்பாறை, பொன்னமராவதி பகுதிகளிலிருந்தும் தீயணைப்புத்துறை வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தனியார் தண்ணீர் லாரிகளும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்தில் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பணியாளர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸார் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *