Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வனசரகர்களை ‘கோ அவுட் ‘ என கூறிய ஆட்சியர் -பரபரப்பு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய குறைதீர்க்கும் நாள் கூட்டம் துவங்கியது. மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் கூட்டம் தொடங்கியது விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகள்,அதிகாரிகள்  அனைவரும் கலந்து கொண்டனர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்  ஆரம்பித்த சில நிமிடங்களில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உதவி வனக்கோட்ட அலுவலர் வந்து உள்ளார என கேட்டார் .அப்பொழுது வனத்துறையிலிருந்து வந்த வனச்சரகர்கள் எழுந்து நின்று வரவில்லை என பதிலளித்த போது (Go out) என கூறி கூட்ட அரங்கை விட்டு வெளியேற உத்தரவிட்டார்.இதற்கு விவசாயிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

கடந்த முறை நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாய நிலங்களில் காட்டு பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் விவசாய பயிர்களை நாசம் செய்வதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வனத்துறை அதிகாரிகளிடம் ஆட்சியர் வலியுறுத்தினார்.

அதன் நிலை குறித்து இன்று கேட்க முற்படும்பொழுது திருச்சி உதவி வனக்கோட்ட அலுவலர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு  வரவேண்டும் என்று ஆட்சியர் உத்தரவையும் ஏற்காமல் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

அதனால் வனசரகர்களை பார்த்து கூட்ட அரங்கை விட்டு வெளியேற மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டது சிறிது நேரம் விவசாயிகள் மத்தியில் பரபரப்பு  ஏற்ப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியிரிடம் தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…… https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *