Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பிளஸ் டூ முடித்தவர்கள் 2000 பேருக்கு வேலை வாய்ப்பு அமைச்சர் கணேசன் திருச்சியில் பேச்சு

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது.

திருச்சி அருகே எஸ்.ஐ. டி தொழில்நுட்ப பயலுகத்தில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் துவக்கி வைத்து பணி நியமன ஆணைகளை வழங்கினர். 

அப்போது பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குவது அரசின் நோக்கம். ஹெச்.சி. எல் கம்பெனியில் 2000 பேருக்கு பிளஸ் டூவில் 60 சதவீதம் கணிதத்தில் பெற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

 தற்பொழுது இன்று நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட கம்பெனிகள் வந்துள்ளன. இதில் 3000 திற்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதுவரை 64 வேலை வாய்ப்பு முகாமில் ஒரு லட்சத்து நான்காயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளோம்.

 இதுவரை மாற்றத்திறானாளிகள் 700 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் 3000 கம்பெனிகள் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று உள்ளன என்றார். உங்களால் முடியும் தன்னம்பிக்கையோடு முயற்சி செய்யுங்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி என நம்பிக்கை தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *