Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

ஏபிவிபி சார்பில் கலாமின் கனவு நாயகர்களின் சங்கம் நிகழ்ச்சி

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் ABVP தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் ABVP தேசிய மாணவர் அமைப்பு பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான நிகழ்வுகளை மாணவர்களின் வளர்ச்சிக்காக நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மரியாதைக்குரிய ஏவுகணை நாயகன் A.P.J.அப்துல் கலாம் ஐயா அவர்கள் கண்ட கனவை நனவாக்கிட மலைக்கோட்டை மாநகரில் கலாமின் கனவு நாயகர்களின் சங்கமம் நிகழ்ச்சி ஏற்பாடகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவத் தலைவர்களையும், கலாமின் கனவை நனவாக்கிட கலாமின் கனவு நாயாகர்களாக வருகின்ற நவம்பர் மாதம் 13/11/2022, ஞாயிற்றுக்கிழமை, அன்று ஸ்ரீரங்கம் கிருஷ்ணன் மஹாலில் காலை 10 மணியளவில் நிகழ்ச்சி ஏற்பாடகியுள்ளது.

மாணவத் தலைவர்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இந்நிகழ்வில் அகில பாரத பொறுப்பாளர்கள், கல்வியாளர்கள் கலந்து கொண்டு வழிநடத்த உள்ளனர். 
நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தொடர்புக்கு : 9345411459, 8300312833, 7339137882,8300312833.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..

https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *