Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

எஸ்.ஆர்.எம் டி ஆர் பி பொறியியல் கல்லூரியில் 13வது விழா

எஸ்.ஆர்.எம் டி ஆர் பி பொறியியல் கல்லூரியில் 13வது விழா கல்லூரி வளாகத்தில் பிரமுகர்கள், பெற்றோர்கள் மற்றும் விருந்தினர்கள் தலைமையில் இன்று 14ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவானது தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கி பிரமுகர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் துணையுடன் விளக்கேற்றி இனிதே துவங்கியது. டாக்டர் B. கணேஷ் பாபு, எஸ். ஆர்.எம் டிஆர்.பி பொறியியல் கல்லாரி முதல்வர் வரவேற்புரை வழங்கினார்.

அவரை தொடர்ந்து எஸ்.ஆர்.எம் இணை தலைவர் ராமாபுரம் மற்றும் திருச்சி வளாகம் ஸ்ரீ நிரஞ்சன் தலைமையுரை ஆற்றினார். மேலும் எஸ்.ஆர்.எம் திருச்சி வளாக இயக்குனர் டாக்டர் N. மால்முருகன், திருச்சி வளாக துணை இயக்குனர் டாக்டர் N. பாலசுப்ரமணியன் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்கள். இவ்விழாவின் தலைமை விருந்தினர் A. நந்தகுமார் ப்ரோக்ராம் மேனேஜர், Thoughtworks, சென்னை, விழா  பேருறுரை ஆற்றினார். இவ்வுரையில் தற்போதைய அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களை கண்டு அறிந்து அதற்கு ஏற்றார் போல மாணவர்கள் தங்களை மேம்ப்படுத்தல் வேண்டும். மேலும் அணைத்து துறைகளிலும் தங்களை ஈடுபடுத்தி கொண்டு திறமைகளை வளர்த்து கொள்ளுமாறு எடுத்துரைத்தார்.

அதனை தொடர்ந்து ஸ்ரீ பரமன் பச்சமுத்து, இயக்குனர், நிறுவனர்- MALARCHI, சென்னை ஊக்க உரை ஆற்றினார். அவர் உரையில் மாணவர்கள் அனைவரும் அவரவர் உடல் நலத்தை பேணி காக்கவும் மற்றும் நல்ல நண்பர்களை தேர்ந்து எடுத்த அவர்கள் மூலம் எதிர்கால வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டும். மாணவர்கள் அவரவர் பாட திட்டங்களை ஆர்வமுடன் பயின்று பலன் பெற வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

இவ்விழாவின் இறுதியாக எஸ். ஆர்.எம். டி.ஆர்பி பொறியியல் கல்லாரி துணை இயக்குனர் டாக்டர் சு. கதிரவன் நன்றியுரை ஆற்றினார் அதனை தொடர்ந்து தேசிய பன் மூலம் இவ்விழா இனிதே நிறைவடைந்தது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *