Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கார் மோதி மூன்று இருசக்கர வாகனம் சேதம் – தீப்பிடித்து எரிந்த எலக்ட்ரிக் பைக் – 6 பேர் காயம்

மதுரை மாவட்டம் அண்ணா பேருந்து நிலையம் அருகே வசித்து வரும் ராஜேஸ் என்பவர் தனது தாய் கல்யாணி, மனைவி அமுதா மற்றும் இரு குழந்தைகளுடன் காரில் காட்டுமன்னார்கோவிலில் நடைபெற்ற திருமணத்திற்கு சென்று விட்டு மீண்டும் மதுரை திரும்பியுள்ளனர்.

கார், மணப்பாறை அடுத்த திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை கைக்காட்டி அருகே சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது தொடர் மழையின் காரணமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைதடுமாறி காரணிக்குளம் நிழற்கொடை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 இருச்சக்கர வாகனங்கள் மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேர் மற்றும் இருச்சக்கர வாகன ஓட்டியான கைக்காட்டி கருப்பையா ஆகியோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துக்குள்ளான இருச்சக்கர வாகனங்களில் ஒரு எலக்ட்ரிக் பைக் எரிந்து முழுவதுமாக கரியானது.

தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற வளநாடு போலீஸார் விபத்து குறித்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *