தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக நேற்று (28.11.2022) திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த போது, ஓலையூர் சிப்பி நகர் குடியிருப்போர் சங்கத்தினர் தங்களது பகுதிக்கு கூடுதல் பேருந்து சேவை வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.
அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் லிமிடெட் திருச்சி மண்டலம் சார்பில், கே.கே.நகர் முதல் ஓலையூர் வரை மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவையுடன் கூடிய கூடுதல் பேருந்து சேவையை வழங்கிட முதல்வர் உத்தரவிட்டார். இதனையடுத்து இன்று ஓலையூர் பேருந்து நிலையத்தில் பேருந்து சேவை தொடக்க விழா நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி ஆகியோர் கொடியசைத்து பேருந்து சேவையை துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி பேருந்தை சிறிது தூரம் ஓட்டி சென்றார். இதனை கண்ட பொது மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments