திருச்சி பாலக்கரை, சங்கிலியாண்டபுரம் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக இரவில் கடைகளில் பூட்டை உடைத்து திருட முயற்சிக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. நேற்று அதிகாலை பாலக்கரை எடத்தெரு பகுதியில் குமார் என்பவர் கைபேசி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் இரண்டு கதவுகள் பூட்டு போட்ட நிலையில் ஒரு கதவை உடைத்த கொள்ளையர்கள் இரவில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால் மறைந்து இருந்து மறுமுறை முயற்சி மேற்கொண்டனர்.
ஆனால் கடைக்கு உள்ளே அவர்களால் செல்ல முடியவில்லை. இதேபோல் கடந்த12ம்தேதி சங்கிலியாண்டபுரம் பகுதியில் ஜாகீர் என்பவர் மொபைல் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி சம்பவம் நடைபெற்று உள்ளது. கடந்த மூன்று நாட்களாக மூன்றுக்கும் மேற்பட்ட கடைகளில் தொடர் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்து வருகிறது.
இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் இவர்கள் புகார் மனு அளித்துள்ளனர். 14ம் தேதி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரின் புகைப்படம் தெளிவாக சிசிடிவி பதிவாகியுள்ளது. இச்சம்பவங்கள் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாததால் அப்பகுதியில் மொபைல் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள்
இரவு நேரத்தில் கடையை பூட்டிவிட்டு மீண்டும் மறுநாள் காலை கடை திறக்கும் வரை பதற்றத்துடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். கொள்ளை சம்பவங்கள் முயற்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments