Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

போகி பண்டிகை- சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க திருச்சி மாநகராட்சி சிறப்பு நடவடிக்கை

போகிப் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பயன்பாட்டில் இல்லாத பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து, மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று திருச்சி  மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து திருச்சி  மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

போகிப் பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் திருச்சி  மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்களிடையே பயன்பாட்டில் இல்லாத பொருட்களான பழைய துணி, டயர் , ரப்பர் ட்யூப் மற்றும் நெகிழி ஆகியவற்றை எரிப்பதைத் தவிர்த்திடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

நமது சுற்றுச்சூழலும், காற்றும் மாசுபடாமல் பாதுகாக்க வேண்டியது அனைவரின் பொறுப்பும், கடமையும் ஆகும். எனவே, மக்கள் தங்களிடையே உள்ள தேவையில்லாத பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து,  இன்று முதல் 14ம் தேதி வரை பொருள்களை சேகரிப்பதற்காக மாநகராட்சி சார்பில் இயக்கப்படும் வாகனங்களில் அல்லது நுண்ணுர செயலாக்கம் மையத்தில் கொடுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இதன் மூலம்  காற்று மாசில்லா ‌ புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

    
#டெலிகிராம் மூலமும் அறிய….  https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *