Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தலைக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலை துவரங்குறிச்சி பிரிவு சாலையில் துவரங்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் துளசி, காவலர் சசிகுமார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கும்,

கார், மினி சரக்கு வேன் போன்ற வாகனங்களில் முறையாக சீட் பெல்ட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கும் அபராதம் விதிக்கப் பட்டது. மேலும் இதுபோன்று தலைகவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து அனுப்பினர்.

தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் காவலர்கள் ஓட்டுனர்களுக்கு எடுத்துக் கூறினர்.மேலும் வாகனங்கள் ஓட்டும்போது வாகனத்தின் வேகத்தை குறைத்து சீரான வேகத்தில் செல்ல வேண்டும் எனவும் ஓட்டுனர்கள் கவனமுடன் வாகனத்தை இயக்கினால் சாலை விபத்துகளை தவிர்க்கலாம் எனவும் கூறினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *