திருச்சி விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் அதிக அளவில் வெளிநாட்டு கரன்சிகளை மறைத்து கடத்திச் செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காக சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில்,திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூர் செல்லும் பயணிகளிடம் வான் நுண்ணறி பிரிவு சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் .அப்பொழுது அமெரிக்க டாலர்கள் (9600) மறைத்து கடத்தி செல்ல பயணி முற்பட்டார். அவரிடம் இருந்து அமெரிக்க டாலர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதன் இந்திய ரூபாய் மதிப்பு 7 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் என தெரிவித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் வழி அறிய …. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments