Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மலையடிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டி – முகூர்த்தகால் நடப்பட்டது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மலையடிப்பட்டி புனித சவேரியார் ஆலயத்தில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற தை மாதம் 23 ஆம் நாள் பிப்ரவரி -5ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதாக விழா கமிட்டினர் முடிவுசெய்துள்ளனர்.

அதற்கான அனுமதிக்கு மாவட்ட ஆட்சித்தலைவருக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக சவேரியார் ஆலய பங்குத்தந்தை ஜேம்ஸ் ஊர் தலைவர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் இணைந்து விழாவிற்கான முகூர்த்தக்கால் நட்டனர்.

இதில் பங்குத்தந்தை சிறப்பு வழிபாடு செய்து ஊர் பொதுமக்கள் மற்றும் ஜல்லிக்கட்டு பேரவையினர் முன்பு முகூர்த்தக்கால் நடப்பட்டு விழாக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *