Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் முதல்முறையாக நடைப்பெற்ற 3டி ஆர்பிட்டல் ஷோ

திருச்சி கண் மருத்துவர் சங்கம் சார்பில் ஐஎம்.ஏ ஹாலில் திருச்சியில் முதல்முறையாக 3டி சர்ஜரி ஷோ நடைபெற்றது. இந்நிகழ்வின் முக்கிய நோக்கம் கண் அறுவை சிகிச்சையில் மேம்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் குறித்து மக்கள் ‌தெரிந்துக்கொள்ளுதல் ஆகும்.

திருச்சி, தஞ்சாவூர், மதுரை, கரூர் போன்ற பல மாவட்டங்களில் இருந்து 100 மருத்துவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.‌ தஞ்சையைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட முதுகலை மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்ட மருத்துவ கலந்தாலோசனை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் சந்தோஷ் G.ஹனோவர் பங்கேற்றார். இந்நிகழ்வில் தமிழ்நாடு கண் மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் ஸ்ரீராம் கோபால், டாக்டர் ரமேஷ் ராஜசேகர் டாக்டர் ராஜ்மோகன், டாக்டர் கணேஷ்,டாக்டர் ராகுல், டாக்டர் நந்தகிஷோர், டாக்டர் மீனாகுமாரி ஆகியோர் பங்கேற்றனர். அனைத்து பார்வையாளர்களுக்கும் 3d கண்ணாடி வழங்கப்பட்டது முதல்முறையாக திருச்சியில் நடைபெறும் 3d ஆர்பிட்டல் ஷோவை ஆர்வத்தோடு பார்வையிட்டனர். டாக்டர். பிரசன்னா வெங்கடேஷ் மற்றும் டாக்டர் வினோத் அருணாச்சலம் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய….. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *