Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு- திருச்சியில்  7140 பேர்  எழுதுகின்றனர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் தொகுதி III,IIIA பல்வேறு பதவிக்கான போட்டித் தேர்வு இன்று நடைபெறுகிறது காலை 9.30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெறும் இத்தேர்வில் திருச்சி மாவட்டத்தில் 24 தேர்வு மையங்களில் 7140 நபர்கள் தேர்வில் எழுத உள்ளனர்.

இப்பணிகளுக்கான 24 தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் போட்டி தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை எட்டு இயங்கு குழுக்கள் செய்கின்றனர். துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலர் ஆயுதம் ஏந்திய ஒரு காவலர் ஆகியோர் தேர்வு மையத்தில் பணியில் இருப்பர். தேர்வு மையங்களை திடீர் ஆய்வு செய்ய துணை ஆட்சியர் நிலையில் 4 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுவதை பதிவு செய்ய வீடியோ கிராபர்கள் நியமனம் செய்யபட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் செல்லிடை பேசி உள்ளிட்ட எந்த மின்னணு சாதனங்களும் தேர்வு மையங்களுக்கு எடுத்து வர அனுமதி இல்லை. கோவிட் நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தேர்வாணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *