Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

புனித மரியன்னை பேராலயத்தில் மகளிர் தின விழா

புனித மரியன்னை பேராலய மகளிர்  தின விழா பேராலய கீழ் தளத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி சிவா எம்பி  விழாவிற்கு தலைமை ஏற்று சிறப்புரை வழங்கினார். பேராலய பெண்கள் பணிக்குழு செயலர் முனைவர் பி. சகாய அமுதா வரவேற்புரை வழங்கினார்.

புனித மரியன்னை பேராலய பங்குத்தந்தை அருள்பணி த.சகாயராஜ், கவிஞர் ஐ. பிரகாசம், CREA மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கிறிஸ்டி சுபத்ரா வாழ்த்துரை வழங்கினார். புனித ஜூலியானாள் பள்ளி செல்வங்கள் மற்றும் புனித மரியன்னை பேராலய இளையோர் இயக்கம் இவர்களின் கலை நிகழ்ச்சிகள் விருந்தாய் அமைந்தன.

சிறப்புரை வழங்கிய திருச்சி சிவா வாழ்த்துரை வழங்கியவர்களும் சமுதாய மாற்றங்களும் சட்டத் திருத்தங்களும் வந்தாலும், பெண்கள் உரிமைகளைப் பயன்படுத்தி மேலும் மேலும் முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தினர். பெண்கள் பணிக்குழு தலைவி மேரி லீமா ரோஸ் நன்றி உரை வழங்கினார். கடின உழைப்பால் உயர்ந்த பெண்கள் விழாவில் கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *