Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா – அம்மனுக்கு கூடை கூடையாக பூக்கள் சாத்தப்பட்டது

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் மாரியம்மன் கோயில் விளங்குகிறது. இக்கோயிலில் நடைபெறும் பல்வேறு விழாக்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற விழா பூச்சொரிதல் விழா ஆகும். மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை துவங்கி, பங்குனி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை 28 நாட்கள் பூச்சொரிதல் விழா நடப்பது வழக்கம்.

“மும்மூர்த்திகளை நோக்கி மாயசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும் உலக நன்மைக்காவும், தன்னை தரிக்க வரும்  பக்தர்களுக்கு எல்லாவிதமான நோய்களும் தீவினைகளும் அனுகாது சகல  சௌபாக்கியங்களும் கிடைக்க மரபுமாறி அம்மனே பக்தர்களுக்கு 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் வருடந்தோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாக கடைசி ஞாயிறு வரை இருப்பது   தனிச்சிறப்பு ஆகும்.

நிகழாண்டில் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாஜனம், வாஸ்து சாந்தி முடிந்து காலை 6.30  மணிக்கு மேல் 8  மணிக்குள் சமயபுரம் மாரியம்மனுக்கு காப்பு கட்டு கட்டுதல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில், கோயில் நிர்வாகம் சார்பில் கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தலைமையில்

யானை மீது பூக்களை கொண்டு வந்த கோயில் பணியாளர்கள், பக்தர்கள் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் பூக்களை கூடைகளில் தலையில் சுமந்தும், கையில் ஏந்தி வந்து அம்மனுக்கு சாத்தினர்.

இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்வேறு வாகனங்களிலிருந்து அம்மனுக்கு திங்கள்கிழமை மதியம் 12 மணி வரை கொண்டு வரவுள்ளனர்.

இந்த பூச்சொரிதல் விழாவினை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணியிலிருந்து திங்கள் கிழமை மதியம் 12 மணி வரை அம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கட்டணம் கிடையாது என கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *