Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி அரசு பள்ளி மாணவிக்கு முதலமைச்சர் பாராட்டு

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவி லயஶ்ரீ. ஆசிரியர்களான சசிகுமார் – நாகேஸ்வரி  தம்பதியின் மகளான இவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில் இரவு நேரங்களில் சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகளால் விபத்து ஏற்பட்டு வருகிறது. அதை தவிர்ப்பதற்காக கால்நடைகளுக்கு விரைவில் பிரதிபலிக்கும் தோடு அல்லது பட்டைகள் வழங்க வேண்டும். இந்த கோரிக்கை பயனுள்ளதாக இருப்பின் வாழ்த்து மடல் அனுப்ப வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த மாணவிக்கு வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் சமூக அக்கறையுடன் ஆலோசனை வழங்கிய மாணவி லயஶ்ரீ-யை பாராட்டியதோடு இரவு நேரங்களில் சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் உயிர்சேதங்களை தடுப்பதற்கு கால்நடைகளுக்கு

இரவில் ஒளிரும் காதணி அல்லது பிரதிபலிக்கும் பட்டையில் அணிவிப்பது சிறந்த நடைமுறையாக இருக்கும் எனும் தெரிவித்து சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காகவும், சிறுவயதிலேயே அவர் மேற்கொண்டுள்ள இச்செயல்களை பாராட்டியுள்ளார்.

மேலும் யுனிசெப்அமைப்புக்கு கொரோனா நிதி வழங்கியது. அகில இந்திய வானொலிகள் 10 நிமிடம் உரையாற்றியது. அகர வரிசைப்படி தமிழ், ஆங்கில பழமொழிகளை தொகுத்து நூல் வெளியிட்டது என்று லயஸ்ரீயின் செயல்களை பாராட்டியதுடன், கல்வியில் மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும் என்றும் புதிய சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *