Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் தங்க கடத்தல் வியாபாரத்தில் ஒருவர் கடத்தல் இரண்டு கும்பலுக்கும் இடையே மோதல் – கடத்தப்பட்டவர் 3 மணி நேரத்தில் மீட்பு

திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் சாதிக்பாட்சா என்பவர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஒரு பயணியிடம் நகையை வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தபோது இவரை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் தென்னூர் பகுதியில் வந்த போது சாதிக் பாஷாவை தாக்கி விட்டு நகையையும், அவரையும் கடத்தி சென்றனர்.

அப்போது சாதிக் பாச்சா கூச்சலிட்டபோது அப்பகுதியில் இருந்த மக்கள் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் கடத்தல் கும்பலை சேர்ந்த அந்த நபரை ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருச்சி அரியமங்கலம் பகுதி சேர்ந்த கதிரேசன் என்பதும், இவருடன் சேர்த்து ஏழு நபர்கள் சாதிக் பாஷாவை கடத்தி அவர் வைத்திருக்கும் நகைகளை எடுத்துச் செல்வதற்காக வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு மாநகர காவல் ஆணைய சத்யபிரியா, துணை ஆணையர் ஸ்ரீதேவி இருவரும் வந்து பிடிபட்ட கதிரேசனிடம் விசாரணை நடத்தினர்.

சிறிது நேரத்தில் தனிப்படை போலீசார் சமயபுரம் அருகே கடத்தப்பட்ட சாதிக் பாஷாவை கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்டு வந்தனர். சாதிக் பாஷாவிடம் தற்பொழுது விசாரணை நடைபெற்று வருகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *