Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீரங்கம் வந்தது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோவில் வஸ்திர மரியாதை

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நாளை 19.04.2023 புதன் கிழமை சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோயிலில் இருந்து ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் , கிளி மாலை ,மற்றும் மங்கல சீர்வரிசை பொருட்களை ஸ்ரீவில்லிபுத்தூர் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அர்ச்சகர்கள் ரமேஷ் பட்டர் , சுதர்சன் பட்டர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் கொண்டு வந்து ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்துவிடம் வழங்கினர்.

 இந்நிகழ்வில் கண்காணிப்பாளர்கள் கோபாலகிருஷ்ணன் , மீனாட்சி , சரண்யா , வெங்கடேசன் , துணை மேளாலர் சண்முகவடிவு , அர்ச்சகர் சுந்தர் பட்டர் , திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *