Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

சூறைக்காற்றில் கீழே விழுந்த வீட்டின் மேற்கூரை – உயிர் தப்பிய 4 குழந்தைகள்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள மருவத்தூர் கிராமத்தில் வசிப்பவர் ராணி (54). கணவர் இறந்த நிலையில் கூலி வேலை செய்து வருகிறார் ராணி, தனது பேரக்குழந்தைகளான தனுஸ்ரீ- (11), நதியா (9), வர்ஷிகா (9), கவிஷ்னா (5) ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு இப்பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் இவரது வீட்டின் மேற்கூறையானது திடீரென காறில் கீழே சாய்ந்தது இதில் அதிர்ஷ்டவசமாக மின்சாரம் தடைபட்டதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இதனை அடுத்து துறையூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கருநாநிதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *