Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் மின்னல் தாக்கி பசுமாடுகள் பலி

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடாஜலபுரம் ஊராட்சியில் வசிப்பவர் விவசாயி வேலாயுதம். இவர் அதே பகுதியில் விவசாயம் மற்றும் கால்நடைகளை வளர்த்து பராமரித்து வருகிறார்.

இந்நிலையில் வழக்கம் போல் தனது வயலில் இரண்டு பசு மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்ற பொழுது மாடுகள் வயலில் கொண்டிருந்ததார். அப்போது திடீரென கரும் மேகங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் வயலில் மேய்த்துக் கொண்டிருந்த மாடுகளின் மீது மின்னல் தாக்கியது.

பின்னர் சம்பவ இடத்திலேயே 2 பசு மாடுகளும் உயிரிழந்தது. கால்நடை மருத்துவர்கள் பசுக்களை உடல் கூறு ஆய்வு செய்த பின்பு ஜேசிபி இயந்திரம் கொண்டு புதைத்தனர். மின்னல் தாக்கி பசு மாடுகள் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *