Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

விவசாயி கொலை வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 5 பேர் கைது

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே சனமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஆர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (60). தமிழ்நாடு விவசாய இயக்கத்தின் மாநில செயலாளரான இவரை கடந்த ஏபரல் 30ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடித்த 17 வயது மாணவன் ஒருவன் சரணடைந்தார்.

அந்த சிறுவன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக சனமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் சண்முகசுந்தரத்தின் உறவினருமான அறிவழகன், அவரது தம்பி பால்ராஜ், அறிவழகனின் சகோதரி மகன் சண்முகவேல், இவரது நண்பர்கள் இளவரசன் மற்றும் கார்த்திக் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சண்முகசுந்தரம் வீட்டிற்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் அறிவழகன், பால்ராஜ், கார்த்திக் உள்பட சுமார் 20 குடும்பங்கள் வீடுகட்டி வசித்து வருகின்றனர். அவர்கள் வீட்டிற்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வாங்குவதற்கு விண்ணப்பிக்கும் போதெல்லாம் அதற்கு சண்முகசுந்தரம் தடையாக இருந்து வந்திருக்கிறார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீருக்காக அறிவழகன் உள்ளிட்ட கிராம மக்கள் சொந்த செலவில் போர்வெல் அமைக்க திட்டமிட்டு எந்திரத்தின் மூலம் போர்வெல் போட்டுள்ளனர்.

இதனை அறிந்த சண்முகசுந்தரம் போர்வெல் போடும் பணியை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அறிவழகனின் சகோதரி மகன் குணசீலம் கல்லூரைச் சேர்ந்த சண்முகவேல் அவரது நண்பர்களான புள்ளம்பாடி அருகே உள்ள திரணிப்பாளையம் பகுதியை சேர்ந்த இளவரசன் மற்றும் 17 வயது சிறுவன், 3 பேரும் சேர்ந்து சம்பவத்தன்று இரவு சண்முகசுந்தரம் வீட்டிற்கு சென்று அரிவாள், கூர்மையான வாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

தப்பிச்சென்ற 3 பேருக்கும் அறிவழகன், பால்ராஜ் மற்றும் கார்த்திக் ஆகியோர் பாதுகாப்பு வழங்கி கொலை சம்பவத்தை மறைக்க உறுதுணையாக இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் இயக்கத்தின் மாநில செயலாளர் சண்முகசுந்தரம் கொலை வழக்கில் சிறுவன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்த சிறுகனூர் போலீசார் சண்முகவேல், இளவரசன், அறிவழகன், பால்ராஜ், கார்த்திக் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *