Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் 10 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆனாம்பட்டி கிராமத்தில் சுமார் 7 ½  ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள செல்லகவுண்ட குளத்தில் இன்று விடியற்காலை 6 மணிக்கு மீன் பிடித்திருவிழா நடைபெற்றது. 

10 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் நிகழ்ச்சியால் அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னதாகவே குளக்கரையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.  வழிபாட்டிற்கு பின் ஆனாம்பட்டி ஊர் நாட்டாமை ராமகிருஷ்ணன், ஊராட்சிமன்ற தலைவர் செந்தில்வடிவேல் அழகர்சாமி, வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் வெள்ளை வீசப்பட்டு மீன் பிடி திருவிழாவை துவக்கி வைத்தனர்.

குளக்கரையில் கையில் வலைகளுடன் கூடியிருந்த பொதுமக்கள் துள்ளி குதித்து ஓடி மீன் பிடிக்க தொடங்கினர். ஜாதி, மதம் பாராமல்  சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் கூடினர். இந்த மீன்படி திருவிழாவில், சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான கிராம பொதுமக்கள் கண்மாயில் குவிந்திருந்தனர்.

பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கிய பொதுமக்கள் ஊத்தா, வலை, கூடை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன்பிடிக்கத் தொடங்கினர். அதில் மீன்பிடித்தவர்கள் கைகளுக்கு நாட்டு வகை மீன்களான கெளுத்தி, கட்லா, ஜிலேபி, கெண்டை, கொரவை, விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன. மீன் பிடித்த சந்தோசத்தில் பொதுமக்கள் சென்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *