Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி காவல் ஆய்வாளர் சில்மிஷம் செய்ததாக இளம்பெண் புகார்

சென்னையை சேர்ந்த 27 வயதுடைய இளம் பெண் கிரிஜா. இவர் திருச்சி பாலக்கரை பகுதியில் தங்கியிருந்து தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் புகார் ஒன்றின் தொடர்பாக திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு சென்றதாகவும், அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சுகுமார் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், தொடர்ந்து தன்னுடைய கைபேசி எண்ணிற்கு ஆபாசமாக புகைப்படங்கள் அனுப்பி பேசி வந்ததாகவும், இது தொடர்பாக ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் தன்னை சிலர் மிரட்டுவதாகவும், தன்னிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளரை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது…. தன்மீது வேண்டுமென்றே குற்றம் சுமத்துவதாகவும்,

அப்பெண்தான் தன்னிடம் தவறாக பேசியதாகவும் தெரிவித்தார். மேலும் இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் ஆய்வாளர் கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *