Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள வண்ணாடு ஊராட்சிக்கு உட்பட்ட பச்சைமலை தோணூர் கிராமத்தில் வசிப்பவர் அழகேசன். இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த சந்தியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நான்கு வருடம் ஆகியும் தம்பதியினருக்கு குழந்தை இல்லை இதனால் அடிக்கடி இவர்களுக்குள் குடும்பத் தகராறு வந்ததாக தெரிகிறது. லாரி ஓட்டுனரான அழகேசன் இன்று வழக்கம் போல் வேலைக்கு செல்வதாக மனைவி சந்தியாவிடம் கூறியுள்ளார். இதனால் மனம் உடைந்த சந்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மன்னனை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிகிறது.

சந்தியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து துறையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இளம்பெண் தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர். திருமணம் ஆகி 4 ஆண்டுகளில் இளம் பெண் இறந்து போன சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *