சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜூன் 21 இன்று திருச்சி தேசிய கல்லூரியில், சிறப்பு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து 8வது ஆண்டாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கலைமாமணி ராமசுவாமி கலந்து கொண்டு யோகா குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டதோடு மாணவர்களுக்கு செய்முறை விளக்கத்தையும், செய்து மாணவர்கள் யோகா செய்ய வேண்டிய முக்கிய காரணத்தையும் அதற்கான பலன்களையும் விளக்கியுள்ளார்.
மேலும் கல்லூரி முதல்வர்டாக்டர் குமார், துணை முதல்வர் டாக்டர்.பிரசன்ன பாலாஜி, என் எஸ்எஸ் பேராசிரியர், என் சி சி பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
13 Jun, 2025
383
21 June, 2023










Comments