Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 700 பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்து நேற்று தமிழக முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதன் ஒரு பகுதியாக திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல்துறை அனுமதியின்றி நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பிமான ப.குமார்,

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான பரஞ்சோதி, அதிமுக அமைப்புச் செயலாளர் டி.இரத்தினவேல், முன்னாள் அமைச்சர்கள் மோகன், சிவபதி, வளர்மதி, மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட 700 பேர் மீது கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *