Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

கிரிக்கெட் விளையாடிய திருச்சி அமைச்சர்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திருச்சி மாநகர திமுக செயலாளர் மு. மதிவாணன் ஏற்பாட்டில் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி

திருச்சி இ.பி.ரோடு ரனமதுரம் மைதானத்தில் போட்டியானது ஜூன் 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மாபெரும் கிரிக்கெட் போட்டியினை திருச்சி மாவட்ட கழக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். 

இப்போட்டியில் முதல் பரிசு ரூ.50,000, இரண்டாம் பரிசு ரூ.25,000, மூன்றாம் பரிசு ரூ.10,000, நான்காம் பரிசு ரூ.5000, சிறந்த தொடர் நாயகன் பரிசு ரூ.3000, இறுதி போட்டிக்கு சிறந்த வீரருக்கான பரிசு ரூ.2000 ஆகியவை அளிக்கப்படுகிறது.

திருச்சி கிழக்கு மாநகரத்திற்கு உட்பட்ட அனைத்து 72 வார்டுகளின் சார்பாகவும், தலா ஒரு அணி போட்டியில் பங்கு கொள்கிறது. போட்டியின் தொடக்க நிகழ்வில் மாநில நிர்வாகி செந்தில் மாவட்டக் கழக துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், லிலாவேலு, மூக்கன் கார்த்தி மாநகரக் கழக நிர்வாகிகள் சந்திரமோகன், பொன்செல்லையாா,

சரோஜினி பகுதி கழகச் செயலாளர்கள் மோகன், நீலமேகம், ராஜ்முஹம்மது, மணிவேல், சிவக்குமார் மற்றும் மவட்டக்கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் கிரிக்கெட் போட்டியின் அணிகளை சார்ந்த வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *