Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இருசக்கர வாகனத்தில் சென்ற திருநங்கை உயிரிழப்பு

திருச்சி அரியமங்கலம் தெற்கு உக்கடையை சேர்ந்தவர் ஆகாஷ் என்ற ஷாலினி (21). இவர் தஞ்சையில் வழக்கறிஞர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, திருநங்கையாக மாறி வாழ்ந்து வந்தார். இவர் வேலை சம்மந்தமாக இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது அவர் அமர்வு நீதிமன்ற காவல் நிலையம் எதிரே உள்ள சாலையில் வேகத்தடையில் ஏறி இறங்கிய போது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந் னதார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *