Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி அருகே கணவன், மனைவி கொடூரமாக வெட்டி கொலை

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பி .மேட்டூரை சேர்ந்தவர் ராஜ்குமார் (28) இவரது மனைவி சாரதா (22). விவசாய வேலை பார்த்து வந்த ராஜ்குமார் துறையூர் தாலுகா சோபனபுரத்தை சேர்ந்த விஜயசேகரன் என்பவருக்கு சொந்தமான நான்கு ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களாக கணவன் மனைவி இருவரும் சோபனபுரத்தில் உள்ள வயலில் தங்கி விவசாய வேலை பார்த்து வந்துள்ளனர். ராஜ்குமார் அவரது மனைவி சாரதாவும் வயலில் அமைந்துள்ள வீட்டிலேயே தங்கி வசித்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டின் வாசலில் இருந்த இரும்பு கட்டிலில் இருவரும் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். அதனை இன்று அப்பகுதிக்குச் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் கொலை செய்யப்பட்டு கடந்த இருவரின் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்பநாய் மற்றும் தடையவியல் நிபுணர்கள்  வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

பொருட்களோ, நகைகளோ திருட்டு போகாத நிலையில் கொலை சம்பவம் எதற்காக நடைபெற்றது. கொலை செய்தது யார் என போலீசார் பல்வேறு கோணங்களில் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கணவன் மனைவி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *