Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

கடந்த (17.06.2023)-ந் தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருவானைக்கோவில், நடுக்கொண்டயம்பேட்டை, கரிகாலன் தெருவை சேர்ந்த 14 வயது அரசு பள்ளி மாணவியை, பக்கத்து வீட்டில் வசிக்கும் 38 வயது மதிக்கதக்க நபர் சிறுமியின் வீட்டிற்கு வந்தும், தன்னுடைய வீட்டிலும் கட்டாயப்படுத்தி அச்சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக வந்த புகாரின்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் நடுக்கொண்டயம்பேட்டையை சேர்ந்த எதிரி தனபிரியன் (எ) பாலு என்பவர் இக்குற்றச்செயலில் ஈடுப்பட்டது தெரியவந்தது. எனவே எதிரிமீது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தும், எதிரியை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிரி தனபிரியன் (எ) பாலு, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரியின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு அவர் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *